அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் 

உறையூர், திருச்சி மாவட்டம்

 Naachiyaar-koyil_temple

சுவாமி : அழகிய மணவாளர்.

அம்பாள் : கமலவல்லி.

தீர்த்தம் : கமல புஷ்கரணி.

தலச்சிறப்பு : பொதுவாக பெருமாள் ஸ்தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பர்.  ஆனால், இங்கு  சந்தன பிரசாதம் தருகின்றனர்.  அம்பாளுக்கு படைக்கப்படும் நைவேத்தியத்தில் காரத்துக்காக  மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது.  மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப்  பெருமாளும், கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர்.   ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டதால் இங்கு சுவாமி, தாயார் இருவரும் அவரை பார்த்தபடி  வடக்கு திசை நோக்கி இருக்கின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று  தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.  இத்தலம்  தாயாரின் பிறந்த தலம் என்பதால், இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள்.  இவளது பெயரால்  இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே  உற்சவராக இருக்கிறாள்.  பெருமாள் உற்சவர் இல்லை.

தல வரலாறு : திருமாலின் பக்தரான நங்க சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான்.   அவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.  திருமாலிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான்.  தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி திருமால்  அனுப்பினார்.  ஒரு சமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்ற போது, ஒரு தடாகத்தில் தாமரை  மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான்.  மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து,  "கமலவல்லி” என பெயரிட்டு வளர்த்தான்.  பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக்  கொண்டிருந்தாள்.  அப்போது, திருமால் அவள் முன்பு குதிரையில் சென்றார்.  அவரைக் கண்ட  கமலவல்லி அவர் மீது காதல் கொண்டாள். அவரையே திருமணம் செய்ய வேண்டும் என  நினைத்தாள்.  இதை புரிந்துகொண்ட திருமால், நந்தசோழனின் கனவில் தோன்றி, தான்  கமலவல்லியை மணக்க விரும்புவதாக கூறினார்.  எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம்  அழைத்துச் சென்றார்.  அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள்.  பின்பு மன்னன்,  உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.

நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் காலை 8.00 மணி வரை, காலை 9.30 மணி முதல் நண்பகல்  12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

நவராத்திரி,

கார்த்திகையில் திருப்பாணாழ்வார் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

அருகிலுள்ள நகரம் : திருச்சி.

கோயில் முகவரி : அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில்,

உறையூர் - 620 003, திருச்சி மாவட்டம்.

தொலைபேசிஎண் :  ரங்கராஜ பட்டர் - 94433 07605.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. மதுரா ஹோட்டல்,

No.1 ராக்கின்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001.

ஜங்சன் ரோடு,

கண்டோன்மெண்ட்,

Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.

 

2. மாயவரம் லாட்ஜ் No 87,

வண்ணாரபேட்டை தெரு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002,

தெப்பக்குளம் அஞ்சல்

Ph : +(91)-431-2711400, 2704089.

 

3. பெமினா ஹோட்டல் 109,

வில்லியம்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001,

மத்திய பேருந்து நிலையம்,

ரெயில்வே ஜங்ஷன்,

Ph : 0431 - 2414501.

 

4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,

ஓடத்துறை ரோடு,

சிந்தாமணி,

திருச்சிராப்பள்ளி - 620 002,

Ph : +91 740 2713466, +91 431-2713466.

 

5. கிராண்ட் கார்டினியா,

22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,

திருச்சி - 620 020,

Ph : +91 95856 44000, +91 431 4045000.

 

அருகில் உள்ள உணவகங்கள் :


1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,

காலேஜ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002.


2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,

கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,

திருவானை கோவில்,

திருச்சி - 620 002.


3.பனானா லீப்,

மெட்ராஸ் ட்ரங்க் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

Ph : 0431-2793287.


4. வசந்த பவன் என்.எஸ்.பி ரோடு,

திருச்சிராப்பள்ளி,

Ph : +(91)-431-2708282, +(91)-8508204247.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 


பஞ்சவர்ண சுவாமி 
550m

உறையூர் வெக்காளி அம்மன் 
650m

உய்யகொண்டான் திருமலை 
3.3km

மலைக்கோட்டை 
3.3km

வயலூர் முருகன் 
8.9km
ஸ்ரீ ரங்கம் 
7.5km